ஜெ.வைக் குறை கூறவில்லை: சிவராஜ் பாட்டீல்
சென்னை:
விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா உள்பட எந்தத் தலைவரையும், எந்த அரசையும்குறை கூறவோ, குற்றம்சாட்டவோ மத்தியஅரசு முயலவில்லை என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்கூறியுள்ளார்.
இதையடுத்து கடந்த 22ம் தேதி சிவராஜ் பாட்டீலுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில்,தனது தலைமையிலான அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக சிலருடைய தூண்டுதலின் பேரில் இவ்வாறுகூறப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளை ஜெயலலிதா ஒரு காலத்தில் தீவிரமாக ஆதரித்ததாகவும், இப்போதுஅவர்களுக்கு எதிராக பேசுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சிவராஜ் பாட்டீல் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மத்திய அரசின் வருடாந்திர அறிக்கையில், எந்தத் தலைவரையும் அல்லது எந்த அரசையும் குறை கூறி ஒருஅம்சம் கூட இடம் பெறவில்லை. அறிக்கையில் கூறப்பட்டிருந்த விஷயங்களை யாராவது திரித்துக் கூறவோ,புணைந்து கூறவோ முற்பட்டால் அதுகுறித்துத் தாங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை தாங்கள் ஏற்கவும்தேவையில்லை. சரியான கூற்றுக்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
யாரையும் களங்கப்படுத்த மத்தியஅரசு முயற்சிக்கவில்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.நீங்களும், உங்களது அரசும் இந்த விஷயத்தில் எந்தவிதமான நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள் என்பதை மத்தியஅரசு தெளிவாக அறியும்.
சமீபத்தில் டெல்லியில்நடந்த முதல்வர்கள் மாநாட்டின்போது தாங்கள் கூறிய கருத்துக்கள் பிரதமர் மற்றும் பிறரால்ஏற்றுக் கொள்ளப்பட்டன. தங்களது யோசனைகள் மிகவும் சரியானவை, அமல்படுத்தக் கூடியவை. இந்தயோசனைகளைஅமல்படுத்தும் முயற்சியிலும் மத்தியஅரசு கண்டிப்பாக ஈடுபடும் என்று பாட்டீல் கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications