ஆந்திராவில் வெள்ளம்- 20 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை புயல் சின்னாபின்னாவாக்கியது. இந்தப் புயலில் 20க்கும் மேற்பட்டவர்கள்பலியாகிவிட்டர்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஓங்கோல் அருகே இந்தப் புயல் கரையைக் கடந்தது. இதனால் நெல்லூர், சித்தூர், கடப்பா,குண்டூர், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.இதில் பல இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன. குடிசைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மரங்கள் வேறோடு சாய்ந்தன.புயல் காற்றுடன் பலத்த மழையும் பெய்ததால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
கன மழை காரணமாக திருப்பதி மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் திருமலா, சோமசீலா அணைகள் நிரம்பியதால்அந்த அணைகள் மிக அவசரமாக திறந்துவிடப்பட்டன. அதிலிருந்து புறப்பட்ட நீர் பல பகுதிகளில் புகுந்து வீடுகளைமூழ்கடித்தது.
பல கடலோர மாவட்டங்களை புயல் புரட்டிப் போட்டுள்ளது. இதில் சுமார் 20 பேர் வரை பலியாகிவிட்டனர்.
கடும் மழை காரணமாக ஆந்திரா வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளனர். பல ஆயிரம் வீடுகள்வெள்ளத்தில் மூழ்கியதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications