For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை நிருபர்களிடம் கருணாநிதி "கடு கடு"!

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி அவசரம் அவசரமாகவும், சற்றே கோபமாகவும்பதிலளித்தார்.

முன்பு ஒருமுறை கோவைக்கு கருணாநிதி வந்தபோது, அவரிடம் சில நிருபர்கள் கேட்ட கேள்விகளால் கோபமடைந்து,பாதியிலேயே பேட்டியை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார்.

இந்த நிலையில்தற்போது கோவையில் நடைபெற்று வரும் மண்டல மாநாட்டுக்கு வந்துள்ள கருணாநிதியை பேட்டிக்காகசெய்தியாளர்கள் அணுகினர். அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்ற செய்தியாளர்கள், கருணாநிதி கீழே வரும்போது பேட்டிவேண்டும் என்று கேட்டனர்.

மண்டல மாநாடுகள் நடக்கும்போது நான் பேட்டியளிப்பதில்லை என்று கருணாநிதி கூறி விட்டு தொடர்ந்து நடந்தார். ஆனாலும்விடாத செய்தியாளர்கள், ஒரே ஒரு கேள்விக்காவது பதில் சொல்லு விட்டு செல்லுங்களேன் என்று விடாப்பிடியாக கெஞ்சினர்.

இதையடுத்து ஹோட்டல் வரவேற்பரையில் நின்றபடியே கருணாநிதி பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட பலகேள்விகளுக்கு கருணாநிதி பட்டென்றும், சற்றே கோபம் கலந்தும், அவசரம் அவசரமாகவும் பதிலளித்தார்.

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப் போகிறார்களா என்ற கேள்விக்கு, அதெல்லாம் முடிவு செய்யவில்லை. மாற்றம் வரப்போகிறதென்று உங்களிடம் ஏதேனும் கூறினார்களா, எனக்கு எதுவும் தெரியாது என்று லேசான கோபத்துடன் பதிலளித்தார்கருணாநிதி.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வருமா என்ற கேள்விக்கும் எனக்குத் தெரியாது என்று பட்டென்று பதிலளித்தார். இதுபோலவேபல்வேறு கேள்விகளுக்கும் கருணாநிதி பட்டென்று பதிலளித்து விட்டுக் கிளம்பியதால், கேட்க நினைத்த பல்வேறு கேள்விகளைவாய்க்குள்ளேயே போட்டுக் கொண்டு அதிருப்தியுடன்கலைந்தனர் நிருபர்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X