மட்டக்களப்பில் தமிழ் இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை, மட்டக்களப்பில் ஜூட் தியாகராஜா என்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஐ.நா. சபையின் சிறப்புப் பிரதிநிதியாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் வந்து சென்ற சில மணி நேரங்களில்இந்த சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்முனை என்ற பகுதிக்கு கிளிண்டன் வந்திருந்து சுனாமி பாதிப்புப்பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்றார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் போர் நிறுத்தம் முறிந்தது. இதைத் தொடர்ந்துஏராளமானோர் (பெரும்பாலும் தமிழர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழரான தியாகராஜா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்தப் படுகொலைகள் குறித்து விடுதலைப் புலிகளும், ராணுவத்தினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications