ஆதிகேசவன் மகனை காவலில் எடுக்க போலீஸ் முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடமாடும் நகைக் கடையாக உலா வந்து போலீஸிடம் சிக்கியுள்ள, மோசடி மன்னன் ஆதி கேசவனின் மகன் சாரதியை போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவுசெய்துள்ளனர்.

வெளிநாட்டு இந்தியர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி பணத்தை மோசடி செய்துள்ள ஆதிகேசவன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள் ஜெயவீரன், ஆயில் பாண்டியன், மிகிர் உள்ளிட்டோரும்கைதாகியுள்ளனர்.

தலைமறைவாக இருந்த ஆதி கேசவனின் மகன் சாரதி சமீபத்தில் கோர்ட்டில் சரணடைந்தார். அவரது சிறைக் காவல் இன்றுடன்முடிவடைகிறது. இதையடுத்து அவரை ஜார்ஜ் டவுன் 3வது நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர். அப்போது சாரதியைகாவலில் எடுக்க போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

சாரதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் ஆதி குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று போலீஸார் நம்புகின்றனர்.7 நாள் போலீஸ் காவலில் எடுக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, ஆதிகேசவனிடம் 330 பவுன் நகைகள் இருந்ததாக தெரியவந்துள்ளது.மோதிரம், செயின் என தனது உடல்முழுவதும் இந்த 330 பவுன் நகைகளுடன்தான் ஆதிகேசவன் உலா வந்துள்ளார். இந்த நகைகள் குறித்தும் போலீஸார் தீவிரவிசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நகைகள் தற்போது எங்கே உள்ளன என்பது குறித்து அவரது மனைவியிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்து அவருக்குசம்மன் அனுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+