மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மின்சாரம் தாக்கி இறந்தனர்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ளது சின்ன கொல்லப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர்மல்லசமுத்திரம் ஒன்றிய அதிமுக துணைச் செயலாளராக இருந்து வந்தார். இவரது வீட்டுக்கு எதிரே மகள் கீதாவின் வீடு உள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை வெங்கடாச்சலம் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது தரையில் அறுந்து கிடந்த மின்சாரவயரில் காலை வைத்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சப்தம் கேட்டு மகள் கீதா, மருமகன்செல்வம், அண்ணன் மகன் ரங்கசாமி ஆகியோர் ஓடி வந்து அவரைப் பிடித்துக் காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்கள் மீதும்மின்சாரம் பாய்ந்தது.
இதில் செல்வத்தைத் தவிர மற்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். செல்வம் உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்வம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications