For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவையில் நாளை தென் மாநில முதல்வர்கள் மாநாடு

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் தென் மாநிலமுதல்வர்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். இதில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம்,கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான குழு இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறது. தமிழக குழுவில் ஜெயலலிதா தவிரஅமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம், தலைமைச்செயலாளர் நாராயணன் ஆகியோர் இடம் பெறுகிறார்கள்.

ஆந்திர மாநிலம்சார்பில் உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி தலைமையிலான குழு கலந்து கொள்கிறது.

கர்நாடகம் சார்பில் அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் எம்.பி. பிரகாஷ் தலைமையிலான குழுவும், லட்சத்தீவு சார்பில் அதன்நிர்வாகியும் கலந்து கொள்கின்றனர். கேரள முதல்வர் இம்மாநட்டுக்கு வரவில்லை. அதேபோல, ஆந்திர, கர்நாடக மாநிலமுதல்வர்களும் கலந்து கொள்ளவில்லை. புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான குழு இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறது.

காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அண்ணாமலை ஹோட்டலில் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் தென்மாநிலங்களில் நிலவும் நக்சலைட் பிரச்சினை, பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள், காவிரிப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்துவிவாதிக்கப்படவுள்ளன.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் புதுவைக்குவருகிறார். அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

ஜெயலலிதாவின் வருகை மற்றும் ஐந்து மாநில பிரதிநிதிகளின் வருகையையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X