ஆதியின் சொத்துக்கள்: சாரதியிடம் தீவிர விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆதிகேசவன் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் குறித்தும், அவரது அடியாட்கள் குறித்தும், மகன் சாரதியிடம் போலீஸார்துருவித் துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோசடி மன்ன் ஆதிகேசவனின் மகன் சாரதியை 4 நாள் காவலில் போலீஸார் எடுத்துள்ளனர். போலீஸ் காவலில் உள்ளசாரதியிடம், ஆதிகேசவன் சேர்த்து வைத்துள்ளசொத்துக்கள், வீடுகள் உள்ளிட்டவை எங்கே உள்ளன. யார் யார் பெயரில் இந்தசொத்துக்களை ஆதிகேசவன் வாங்கிப் போட்டுள்ளார் என்பது குறித்து போலீஸார் சாரதியிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சாரதி பெயரில் ஆதிகேசவன் தனது சொந்த ஊரான சிறுவாடியில் 5 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டுள்ளார். அந்த இடத்தைஅடையாளம் காட்டுவதற்காக சாரதியை சிறுவாடிக்கு அழைத்துச் செல்ல போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதுதவிர ஆதியின் மகள், மனைவி பெயரில் வாங்கிப் போடப்பட்டுள்ள வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் குறித்தும் போலீஸார்சாரதியிடம் விசாரித்து வருகிறார்கள்.

இதுதவிர ஆதி சாப்பாடு போட்டு வளர்த்துத வந்த பல அடியாட்கள் தற்போது தலைமறைவாகி விட்டனர். இவர்களை சாரதிதான்கட்டுப்பாட்டில் வைத்திருந்து, பணம் கேட்டு வருபவர்கள் மீது ஏவி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்தும் சாரதியிடம்விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+