ஐஸ்லாந்தில் சாம்பார், வடை சாப்பிட்ட கலாம்!
ரெய்ஜாவிக்:
ஐஸ்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பெங்களூரைச் சேர்ந்த பெண்மணி தயாரித்தசாம்பார், வடையை சுவைத்து சாப்பிட்டார்.
ஐஸ்லாந்து தலைநகர் ரெய்ஜாவிக்கில், நார்வேக்கான இந்தியத் தூதர் மாஷெத் சச்தேவா, அப்துல் கலாமுக்கு இரவு விருந்துஅளித்தார். அந்த விருந்தில் அப்துல் கலாமுக்கு மிகவும் பிடித்த தென்னிந்திய வகை உணவுகள் பரிமாறப்பட்டன. குறிப்பாகசாம்பாரும், வடையும்.
சந்திராவின் உணவு வகைககை ருசித்துச் சாப்பிட்ட கலாம், சாம்பார், வடையை மிகவும் அனுபவித்து ருசித்தார். பின்னர் நேராகசந்திரிகாவிடம் சென்று அவரைப் பாராட்டி, ஆசிர்வதித்தார். அப்போது கூடியிருந்த ஐஸ்லாந்து நாட்டு செய்தியாளர்கள், சாம்பார்வடை குறித்து கலாமிடம் கேட்டபோது, வடையை சாப்பிட்டுப் பாருங்கள், மிகவும் சுவையானது. அத்தோடு கொஞ்சம்சாம்பாரையும் சேர்த்துச் சாப்பிடுங்கள், மிகவும் அதை நேசிப்பீர்கள் என்று புன்னகையுடன் கூறினார்.
சந்திரிகா 10 ஆண்டுகளுக்கு முன்பே ஐஸ்லாந்து வந்து விட்டாராம். இங்கு நடைபெறும் அரசு விழாக்களுக்கு அவர்தான் உணவுபதார்த்தங்களை சப்ளைசெய்கிறார். தற்போது கலாம் வந்திருப்பதால், தென்னிந்திய உணவு வகைகளை தயாரிக்கும் பாக்கியம்தனக்குக் கிடைத்ததாக சந்திரிகா பெருமையுடன் கூறுகிறார்.
ஐஸ்லாந்து அதிபருக்கு தென்னிந்திய உணவு வகைகள் ரொம்பப் பிடிக்குமாம். சமையலுக்குத் தேவையான மசாலா பொருட்கள்,மற்ற பொருட்களை இந்தியாவிலிருந்தே சந்திரிகா வரவழைத்துக் கொள்கிறாராம்.
அப்துல் கலாமுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் மெதுவடை, இட்லி, வடை, சாம்பார், தேங்காய் சட்னி ஆகியவை பிராதனமாகஇடம் பெற்றிருந்தது.
விருந்துக்கு முன்னதாக நடன, கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அதில் சலீல் பட் என்பவர் மோகன வீணை வாசித்தார்.சர்மிஷ்டா முகர்ஜியின் குழுவினர் கதக் நடனம் வழங்கினர்.