ஆதியின் லீலைகள்: "கக்குகிறார்" சாரதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தந்தை ஆதிகேசவனும், தானும் பலமுறை சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்று, மோசடிப் பணத்தில் உல்லாசமாகஇருந்ததாக ஆதியின் மகன் சாரதி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மோசடி மன்னன் ஆதி கேசவனின் மகன் சாரதியை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.ஆரம்பத்தில் விசாரணைக்கு சாரதி ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. எல்லாம் செய்தது எனது தந்தைதான். எனக்கு ஒன்றும்தெரியாது என்று மட்டுமே அவர் கூறி வந்தார்.

ஆனால் போலீஸாரின் தீவிர விசாரணை காரணமாக இப்போது படிப்படியாக ஆதி குறித்தபல தகவல்களை கக்கி வருகிறாராம்சாரதி.

மோசடி செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஆதிகேசவனும், அவரது மகனும் உல்லாசமாக வாழ்ந்துள்ளனர். சொத்துக்களைவாங்கி ஒரு பக்கம் குவித்ததுடன், பல்வேறு நாடுகளுக்கும் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றுசந்தோஷமாக இருந்துள்ளனர்.

ஆதிகேசவனிடம் பணம் கேட்டு பல வெளிநாட்டு இந்தியர்களும் அணுகியுள்ளனர். அவர்களிடம் தேனொழுக பேசும் ஆதிகேசவன், கேட்டதை விடஅதிகமாக கொடுப்பதாக ஆசை காட்டுவாராம். இதனால் மகிழ்ந்து போகும் அவர்கள் உடனடியாகஆதியை தங்களது நாடுகளுக்கு அழைத்து விருந்து உபசாரம் செய்து குளிர்வித்து அனுப்புவார்களாம்.

இதுபோன்ற வெளிநாட்டுப் பயணங்களின்போது சாரதியையும் ஆதி உடன் அழைத்துச் செல்வாராம். ஐந்து நட்சத்திரஹோட்டல்களில் தங்கி உல்லாசத்தை அனுபவித்து விட்டுத்தான் இருவரும் சென்னை திரும்புவார்களாம்.

எந்த எந்த நாடுகளுக்கு சென்றுள்ளார்கள், வெளிநாட்டில் யார் யாரிடம் மோசடி செய்தார்கள், அங்கு சொத்து ஏதும் வாங்கிப்போட்டிருக்கிறார்களா என்பது உள்ளிட்ட தகவல்களையும் போலீஸார் சாரதியிடம் கேட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+