எம்.எல்.ஏ. மகன் அட்டகாசம்!
மதுரை:
மதுரை சமயநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மகன் குடிபோதையில் தகராறு செய்ததில் ஏற்பட்ட மோதலில் 3பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 3 வீடுகளும் சேதமடைந்தன.
பொன்னம்பலத்தின் மீது அதிமுகவினரே பல்வேறு புகார்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவரது 2 வது மகன்தில்லையம்மபலம், பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். தனது நண்பர்கள் சிலருடன் மந்திக்குளம் என்ற கிராமத்திற்கு அவர்சென்றார்.
பின்னர் தனது ஊருக்கு வந்து 50க்கும் மேற்பட்டவர்களைத் திரட்டிக் கொண்டு மீண்டும் மந்திக்குளம் சென்றார் தில்லையம்பலம்.அங்கு புருஷோத்தமன், ராமமூர்த்தி உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட மொத்தம் 3 வீடுகளைஎம்.எல்.ஏ.வின் மகனுடன் வந்தகும்பல் தாக்கி சேதப்படுத்தியது.
இதுதொடர்பாக ஊர்க்காரர்களுக்கும், அவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பேர் அரிவாள்களால் வெட்டப்பட்டனர்.மூன்று பேரும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, தில்லையம்பலத்தின் சொந்த ஊர் கருவனூர், தனது நண்பர்களுடன்அடிக்கடி மந்திக்குளம் வந்து அங்குள்ள பெண்களைக் கேலி செய்வதும், குடித்து விட்டு கலாட்டாவில் ஈடுபடுவதுமாக அவர்இருந்துள்ளார். இதை ஊர்க்காரர்கள் தட்டிக் கேட்டபோது தனது தந்தையின் பெயரைச் சொல்லி மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக போலீஸாருக்குப் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் செவ்வாய்க்கிழமைதில்லையம்பலம் அங்கு தனது நண்பர்களுடன் வந்தபோது பெரும் மோதல் வெடித்துள்ளது.
மோதலையடுத்து கருவனூர், மந்திக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஊமச்சிக்குளம்போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications