இந்தியா முழுவதும் இன்று முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட்டின் விலை 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில்வே பிளாட்பார டிக்கெட் 3 ரூபாயாக இருந்து வந்தது. இதை 5 ரூபாயாக உயர்த்தி ரயில்வ அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்சமீபத்தில் அறிவித்தார். ஜூன் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருவதாகவும் ரயில்வே துறை அறிவித்திருந்தது.
அதன்படி இன்று முதல் ரயில்வே பிளாட்பார டிக்கெட் 5 ரூபாயாக உயர்ந்தது.