ஆதி வீட்டு ஏ.சி. மெஷின் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மோசடி மன்னன் ஆதி கேசவனுடைய வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி குளிர்சாதன இயந்திரங்களை (ஏ.சி.), பறிமுதல்செய்தனர்.

நூற்றுக்கணக்கான பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆதிகேசவன், அவரது மகன் சாரதி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சாரதி தற்போது போலீஸ் காவலில் உள்ளார். ஆதி குறித்த பல்வேறு தகவல்களை அவர் போலீஸாரிடம்தெரிவித்துள்ளார்.

ஆதி கேசவனின் வியாசர்பாடி வீட்டில் உள்ள குளிர்சாதன இயந்திரங்கள் மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டவைஎன்பது அவரிடம் நடத்திய விசாரணையின்போது தெரியவந்தது. வியாசர்பாடி வீட்டுக்கு சாரதியை நேரில் அழைத்து சென்றுபோலீஸார் விசாரணை நடத்தியபோது இத்தகவல்களை அவர் கூறினார்.

இதையடுத்து போலீஸார் வியாழக்கிழமை ஆதிகேசவன் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தி அங்கு பொருத்தப்பட்டிருந்தகுளிர்சாதன இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இந்த இயந்திரங்கள் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.சாரதியின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைவதால் அவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்படுவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+