ஆதி வீட்டு ஏ.சி. மெஷின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மோசடி மன்னன் ஆதி கேசவனுடைய வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி குளிர்சாதன இயந்திரங்களை (ஏ.சி.), பறிமுதல்செய்தனர்.
நூற்றுக்கணக்கான பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த ஆதிகேசவன், அவரது மகன் சாரதி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சாரதி தற்போது போலீஸ் காவலில் உள்ளார். ஆதி குறித்த பல்வேறு தகவல்களை அவர் போலீஸாரிடம்தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் வியாழக்கிழமை ஆதிகேசவன் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தி அங்கு பொருத்தப்பட்டிருந்தகுளிர்சாதன இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இந்த இயந்திரங்கள் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.சாரதியின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைவதால் அவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுசிறையில் அடைக்கப்படுவார்.












Click it and Unblock the Notifications