சென்னை: புதிய அரசு மருத்துவனை ஜூலை 1ல் திறப்பு
சென்னை:
ரூ. 104 கோடியில் கட்டப்பட்டுள்ள சென்னை அரசு மருத்துவமனையின் புதிய 7 மாடிக் கட்டடம் ஜூலை 1 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
சென்னை அரசு மருத்துவமனையின் பழைய கட்டடங்கள் மிகவும் பழுதடைந்திருந்த காரணத்தால் அவற்றை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிதாக ரூ. 104 கோடியில் 7 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
ஜூலை 1ஆம் தேதி மருத்துவமனையை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார். அதி நவீன வசதிகள், அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டதாக இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. இதுதவிர கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வசதியும் இந்தப் புதிய மருத்துவமனையில் ஏற்படுத்தப்படவுள்ளது.
தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் மிகவும் குறைந்த செலவில் அதி நவீன வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், நடுத்தர வகுப்பு மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
1500க்கும் மேற்பட்ட படுக்கைகள், 15க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள் கொண்டதாக இந்த கட்டடம் அமைந்துள்ளது. இந்த புதிய கட்டடங்களுக்கு அருகே உள்ள பழைய கட்டடங்களும் தொடர்ந்து செயல்படும். மொத்தம் 3000க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்டதாக சென்னை அரசு பொது மருத்துவமனை விளங்குகிறது.












Click it and Unblock the Notifications