திமுக செயற்குழு கூடியது
சென்னை:
திமுத தலைமை செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமைகாலை தொடங்கியது.
சட்டசபை இடைத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததன் பின்னணியில் கூடியுள்ள இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர்அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், செயற்குழுஉறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
.தேர்தலில் புதிய உத்தியை கையாளுவோம் என்று கருணாநிதி கூறியிருந்தார். அந்த உத்தி குறித்தும் கூட்டத்தில் முக்கியமாகவிவாதிக்கப்படுகிறது. அதேபோல வாக்காளர் பட்டியலில் ஏராளமான பேரின் பெயர்கள் விடுபட்டிருப்பது குறித்தும், பல்வேறுபுதிய பெயர்களைச் சேர்க்க மனு கொடுக்கப்பட்டிருப்பது குறித்தும், சாலைப் பணியாளர்களுக்கான போராட்டம் குறித்தும்இக்கூட்டதில் விவாதிக்கப்படுகிறது.
கூட்டத்திற்குப் பின்னர் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவிப்பார்.












Click it and Unblock the Notifications