ஆடிட்டர் வழக்கு: ரகுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விஜயேந்திரர் தம்பி ரகுவுக்கு, சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன்தாக்குதல் வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது சென்னை நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.
இந்த நிலையில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரகு மனுசெய்திருந்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி ரோச்சையாஅறிவித்துள்ளார். இதிலும் ரகுவுக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்.
ஏற்கனவே சங்கரராமன் வழக்கு மற்றும் ஆடிட்டர் வழக்குகளில் ஜாமீன் கிடைத்த சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர் நேற்றுமாலை விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications