இலங்கை: சன் டி.வி அலுவலகம் மீது குண்டு வீச்சு!
கொழும்பு:
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் உள்ள சன் டிவி ஒளிபரப்பு நிலையம் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதனால் சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்பு முற்றிலும்தடைபட்டது.
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் வைரவர்புளியங்குளம் என்ற இடத்தில் சன் டிவியின் மறு ஒளிபரப்பு நிலையம் அமைந்துள்ளது. இதை தமிழ் ஈழ விடுதலைஅமைப்பைச் (டெலோ) சேர்ந்தவர்கள் நிர்வகித்து வந்தனர். சன் டிவியின் நிகழ்ச்சிகளை இந்த நிலையம் மூலம், வவுனியா மற்றும் சுற்றுப் பகுதிகளில் மறு ஒளிபரப்புசெய்து வந்தனர்.
இந்த நிலையம் மீது வியாழக்கிழமை அதிகாலை, அடையாளம் தெரியாத சிலர் குண்டு வீசித் தாக்கினர். இதில் நிலையத்தின் பெரும்பகுதி சேதமடைந்தது, ஒளிபரப்புசாதனங்களும் சேதமடைந்தன.
அடையாளம் தெரியாத 3 பேர் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. குண்டு வீச்சு நடந்த இடத்தை போலீஸாரும், ராணுவத்தினரும்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இலங்கையில் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், சன் டிவி அலுவலகம் குண்டு வீசித் தாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.