For Daily Alerts
Just In
கார் மோதி 3 குழந்தைகள் பலி
மதுரை:
மதுரை அருகே தாறுமாறாக கார் ஓடி மோதியதில் பள்ளிக்குச் சென்ற இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் பரிதாபமாக இறந்தனர்.
மதுரை அருகே மேலூரைஅடுத்துள்ளது கருங்காலக்குடி. இப்பகுதி அருகே உள்ள பரமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் அருகே உள்ள வஞ்சி நகரம் ஊராட்சிப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இதில் 10 வயதாகும் பிரியா, திணேஷ் குமார், சரவணன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
கோடை விடுமுறைக்குப் பின் வியாழக்கிழமைதான் பள்ளிக்கூடங்கள் திறந்தன. பள்ளிக்குச் சென்ற 2வது நாளிலேயே 3 சிறுவர், சிறுமியரும் இறந்தது அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
Comments
Story first published: Friday, June 3, 2005, 5:30 [IST]