ஜெயலட்சுமி: கடத்தல் வழக்கு தள்ளிவைப்பு
மதுரை:
ஜெயலட்சுமி குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கு மதுரை நீதிமன்றத்தில் ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் மீது ஜெயலட்சுமி கூறிய செக்ஸ் புகார் மற்றும் அவரது குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கு ஆகியவற்றை சிபிஐ தனித்தனியாக விசாரித்துஅறிக்கை தாக்கல் செய்தது. இதில் ஜெயலட்சுமி குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கில் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், வெள்ளையன், சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான்,நகைக்கடை அதிபர் முருகவேல் மற்றும் அவரது நண்பர்கள் ரவி சங்கர், சண்முகம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று (3ம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதன்படி இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், வெள்ளையன், சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், நகைக்கடை அதிபர் முருகவேல் மற்றும் அவரது நண்பர்கள் ரவிசங்கர்,சண்முகம் ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அய்யாசாமி முன் ஆஜரானார்கள்.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அய்யாசாமி, அடுத்த மாதம் (ஜூலை) 5ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும்ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications