8ம் தேதி காஞ்சி திரும்புகிறார் ஜெயேந்திரர்
கலவை:
ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் வருகிற 8ம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்திற்குத் திரும்புகிறார்கள்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு சங்கராச்சாரியார்களும் தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். முதலில் விடுதலையான ஜெயேந்திரர்,கலவை சங்கர மடத்தில் தங்கினார். நீதிமன்ற நிபந்தனை காரணமாக சென்னையில் தங்கியிருந்த விஜயேந்திரர் பின்னர் கலவை மடத்திற்கு வந்து விட்டார்.
முதலில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுகிறார்கள். பின்னர் சர்வ தீர்த்த குளக்கரை அருகே இருவருக்கும் சங்கர மடம்சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து சங்கர மடத்திற்கு இருவரும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
சங்கர மட நுழைவாயிலிலும் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் சங்கர மடத்தில் சந்திரமெளலீஸ்வரர் விக்ரகத்திற்கு பூஜைகள் செய்யப்படும்.
கொலை வழக்கில் சிக்கிய பின்னர் கலவையில் தங்கியிருந்த ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் மீண்டும் காஞ்சிபுரம் திரும்புவது சங்கர மட பக்தர்களிடையேஉற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications