போபர்ஸ்: எதிர்க்கட்சிகளுக்கு ஜி.கே.வாசன் எச்சரிக்கை!
சென்னை:
போபர்ஸ் வழக்கின் முக்கிய ஆதாரங்களாக கூறப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்று உச்சநீதிமன்றம் முக்கிய கருத்தைவெளியிட்டுள்ளதால், காங்கிரஸ் குறித்தோ, சோனியா காந்தி குறித்தோ இனிமேல் எந்தக் கட்சியும் குற்றம் சாட்ட தார்மீக உரிமைஇல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஆனால் இப்போது எதிர்க்கட்சிகளின் வேஷம் கலைந்து விட்டது. இந்துஜா சகோதரர்களைஇந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ளஉச்சநீதிமன்றம், இந்த வழக்கில் முக்கியமான ஆதாரங்களாக கூறப்பட்ட ஆவணங்கள் போலியானவை, நம்பக் கூடிய வகையில்இல்லை. மக்கள் பணத்தை இத்தனை காலமாக வீணடித்து விட்டார்கள். இனிமேலாவது இதுபோன்ற வழக்குகளை கோர்ட்டுக்குக்கொண்டு வர வேண்டும் என்று கடுமையாக கூறியுள்ளது.
இத்தனை காலமாக ராஜீவ் காந்தியையும், சோனியா காந்தியையும் குற்றம் சாட்டி விமர்சித்து வந்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும். இதற்கும் மேல் சோனியா காந்தியை விமர்சிக்கஅவர்களுக்கு எந்த அருகதையும், தார்மீக உரிமையும் இல்லை.தங்களது அவதூறுகளை இத்துடன் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வாசன்.