சென்னை: மின் வாரிய அலுவலகம் மீது தாக்குதல்
சென்னை:
சென்னைப் புறநகர்ப் பகுதியான ஆதம்பாக்கத்தில் தொடர்ந்து இரவு, பகலாக மின் வெட்டு அமலில் இருந்ததால் ஆத்திரமடைந்தபொதுமக்கள் மின்வாரிய அவலகத்தை தாக்கி அடித்து நொறுக்கினர்.
வெயில் கொளுத்தி வரும் இந்த நேரத்தில், இதுபோல அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் கொந்தளித்தனர். இந்தநிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவும் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் தூங்க முடியாமல் பெரும்அவதிப்பட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அவர்கள் புகார் கொடுத்தனர். ஆனாலும் சரியான நடவடிக்கைஇல்லை. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடித்ததால் கோபமடைந்த பொதுமக்கள், அப்பகுதியில் உள்ளமின்வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களைசமாதானப்படுத்தினர். பின்னர் சிறிது நேரம் கழித்து மின்சாரம் வந்தது.