For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்: தம்பதிகளுக்கு ஜெ. உதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் மற்றும் 3 குழந்தைகளைப் பெற்ற இரு தம்பதிகளுக்கு ரூ. 4.5 லட்சம் நிதியுதவியை முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன்-கலைமணியின் தம்பதிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஒரே பிரசவத்தில் 4குழந்தைகள் பிறந்தன. இதில் 3 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை ஆகும்.

இதேபோல, மதுரை வேட்டயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வம்-சரஸ்வதி தம்பதிக்கு கடந்த மாதம் ஒரே பிரசவத்தில் 3குழந்தைகள் பிறந்தன. இதில் 2 குழந்தைகள் ஆண், ஒரு குழந்தை பெண் ஆகும்.

இரு தம்பதியினரும், தாங்கள் வறுமையில் வாடி வருவதாகவும், குழந்தைகளை வளர்க்க உதவி செய்ய வேண்டும் எனவும்முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, இரண்டு தம்பதியினருக்கும் பிறந்த பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.1லட்சமும், ஆண் குழந்தைகளுக்கு தலா ரூ. 50,000மும் வழங்க உத்தரவிட்டார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் இந்த நிதி, குழந்தைகளின் பெயரில் தமிழ்நாடு போக்குவரத்துவளர்ச்சி நிதியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் குழந்தைகளை பராமரிக்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கு 18 வயதாகும் போது அவர்களது படிப்பு அல்லது வேலைக்கு அந்த நிதியை பயன்டுத்திக் கொள்ளவும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிதியுதவியின் மூலம், கடலூர் தம்பதிக்கு மாதந்தோறும் வட்டித் தொகையாக ரூ. 1,458ம், மதுரை தம்பதிக்கு 1167 ரூபாயும்கிடைக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X