For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகை. கலெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அமெரிக்கா அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுனாமி நிவாரணப் பணிகளில் சிறப்பாக கையண்ட நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அமெரிக்க அரசுஅழைப்பு விடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் 26ம் தேதி இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சுனாமி தாக்கியது. இந்தகோரத் தாக்குதலில் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் இம்மாவட்டத்தில் மீட்புப் பணிகளை முடுக்கி விடுவதற்காக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன்,நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதன் பிறகு இம் மாவட்டத்தில் கலெக்டர் ராதாகிருஷ்ணனின் தீவிரநடவடிக்கையால் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்றன.

இதையடுத்து இலங்கை அரசின் அழைப்பின் பேரில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயருடன் ராதாகிருஷ்ணன்இலங்கை சென்றார். இலங்கை அரசின் சுனாமி மறு சீரமைப்புக் குழுவுடன் இணைந்து நிவாரணப் பணிகளை பகிர்ந்து கொள்வதுகுறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

இந் நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளிண்டன் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடதமிழகத்திற்கு வந்தார். நாகப்பட்டினம் வந்த அவருக்கு கலெக்டர் ராதாகிருஷ்ணன், சுனாமிக்குப் பின் மேற்கொள்ளப்பட்டதுரிதமான நடவடிக்கைகள் குறித்து விளக்கமாகக் கூறியதுடன், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கிளிண்டனை அழைத்துச்சென்றார்.

கலெக்டர் ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள் கிளின்டனுக்கு பிடித்து விட்டது. இந் நிலையில் அமெரிக்காவில் சுனாமிபாதிப்புள்ள வாஷிங்டன், சீயாட்டில், புளோரிடா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் உள்ள கல்விநிறுவனங்களில் சுனாமிக்குப் பின் மேற்கொள்ளப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விரிவுரையாற்றவும், விவாதம்நடத்தவும் ராதாகிருஷ்ணனுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X