சுனாமி: பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாளில் நிவாரண உதவி- ப.சிதம்பரம்
டெல்லி:
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நாகப்பட்டினம், கடலூர் மற்றும்கன்னியாகுமரி மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மறு நிவாரணம் கோரி வங்கிகளுக்கு விண்ணப்பங்களைஅனுப்பியுள்ளனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட, ஆந்திரா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் நிவாரணப் பணிகள் மிக வேகமாகநடந்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் தான் நிவாரணப் பணிகள் மந்தமாக உள்ளன.
முதல் மூன்று பகுதிகளில் மக்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று வங்கிகள் விரைவாக உதவிகள் செய்து வருகின்றன.சென்னையில் மட்டும் நேற்று 141 விண்ணப்பங்கள் நிவாரண
சுனாமி நிவாரணத்தைப் பொறுத்தவரையில் வங்கிகள் ஆற்றிவரும் பணி மிகச் சிறப்பானது. சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளஉப்புக் காய்ச்சும் தொழிலாளர்களுக்கும் சுனாமி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications