மதுரை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள்அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி முன் பதிவுகவுண்டரில் பணிபுரியம் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டமும் செய்தனர்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ரயில்வே பாதுகாப்புப் படை கமாண்டிங் சூப்பிரண்ட் பாபுராய் விரைந்து வந்து ரயில்வேஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததால்அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த திடீர் போராட்டத்தால் மதுரை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் டிக்கெட் முன் பதிவு செய்ய முடியாமல் பயணிகள்அவதிப்பட்டனர்.












Click it and Unblock the Notifications