எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியாயின
சென்னை:
பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. சாத்தூர் மாணவி ரம்யா 490 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயேமுதலிடத்தை பெற்றார்.முதல் 3 இடங்களையும் மாணவிகளே பிடித்தனர்.
தமிழகம் முழுவதும், கடந்த மார்ச் மாதம் 7.68 லட்சம் மாணவ, மாணவியர் பத்தாவது வகுப்பு தேர்வை எழுதினர். விடைத்தாள்திருத்தும் பணி முடிந்து பின்னர் மதிப்பெண் பட்டியல்களும் தயாராகி விட்ட நிலையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமல்இருந்தது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
மாநிலத்திலேயே முதலிடத்தை சாத்தூர் மாணவி ரம்யா பெற்றுள்ளார். இவர் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தூத்துக்குடிமாணவி மகராசி 489 மதிப்பெண்களுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். நாகர்கோவிலை சேர்ந்த மாணவி சிந்துவும்,தூத்துக்குடியை சேர்ந்த மாணவி ஷர்மிளாவும் 488 மதிப்பெண்கள் எடுத்து 3 வது இடத்தை பிடித்துள்ளனர்.
மொத்த தேர்ச்சி விகிதம் 77.8 சதவீதம் ஆகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 80.8 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம்75 சதவீதம். சுனாமி பாதித்த பகுதிகளில் தேர்ச்சி சதவீதம் 71.31.
கணித பாடத்தில் 8054 பேர் 100 மதிப்பெண்களும், அறிவியலில் 280 பேர் 100 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 6 பேர் 100மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
தேர்வில் பெயிலானவர்களுக்கு துணைத் தேர்வு அடுத்த மாதம் (ஜூலை) 7ம் தேதி நடைபெறுகிறது.
மதிப்பெண் பட்டியல்கள் ஏற்கனவேபள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டன.
இன்றே தங்களது பள்ளிகளில் முடிவுகளை மாணவ, மாணவியர் தெரிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட இணைய தளங்களிலும்தேர்வு முடிவுகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications