சுனாமி பாதித்த பகுதிகளின் சாதனை!
சென்னை:
சுனாமி பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பத்தாவது வகுப்புத் தேர்வில் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
பத்தாவது வகுப்புத் தேர்வில் வழக்கம் போலவே, மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனைபடைத்துள்ளனர். மற்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரை விட சுனாமி பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மாணவ,மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
நெல்லையில், சுனாமியால் பாதிக்காத பகுதிகளில் 88.02 சதவீதமும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 92.88 சதவீதமும் தேர்ச்சி விகிதம்உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்படாத பகுதிகளை விட பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின்தேர்ச்சி விகிதம் 27.48 சதவீதம் கூடுதலாகும்.
கடலூரிலும், சுனாமி பாதிக்காத பகுதிகளை விட பாதித்த பகுதிகளில் தேர்ச்சி விகிதம் 10 சதவீதம் கூடுதலாகும். இதே நிலை தான்தூத்துக்குடி, நாகை, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் சுனாமியால் பாதித்த பகுதிகளில் மாணவ, மாணவியர் தேர்ச்சிவிகிதம் அதிக அளவில் உள்ளது.












Click it and Unblock the Notifications