For Daily Alerts
Just In
வீட்டில் விபசாரம்: நடிகை ஈஸ்வரி கைது
சென்னை:
வீட்டில் வைத்து விபசாரம் நடத்திய நடிகை ஈஸ்வரி கைது செய்யப்பட்டார்.
சென்னையில் விபசாரத்தை கட்டுப்படுத்த போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய இடங்களில்போலீஸார் மாறு வேடங்களில் கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து போலீஸார் மாறுவேடத்தில் நடிகை ஈஸ்வரியின் வீட்டுக்கு சென்று தங்களுடன் ஜாலியாக இருக்க பெண்கள்வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய ஈஸ்வரியும் சில பெண்களை போலீஸுக்குஅறிமுகப்படுத்தியுள்ளார்.
உடனே போலீஸார் தங்களது வேடத்தை கலைத்து நடிகை ஈஸ்வரியையும், அவர் விபசாரத்தில் ஈடுபடுத்திய ஷீபா (வயது20),பிரியா (வயது20) ஆகியோரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நடிகை ஈஸ்வரி பல்வேறு தமிழ் படங்களில் துணை நடிகையாகவும், டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
Comments
Story first published: Sunday, June 5, 2005, 5:30 [IST]