குற்றால அருவிகளில் திடீர் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
கடந்த சில தினங்களாக மலைப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்றிரவு குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். கேரளாவில் பருவ மழை துவங்கினால் தான் குற்றாலத்தில் சீசன் களை கட்டும்.ஆனால் கேரளாவில் இன்னமும் முழுமையாக பருவ மழை தொடங்கவில்லை. இதனால் குற்றாலத்தில் சீசனும் தொடங்காமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை குற்றால மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதனால் இரவு 7 மணிக்கு மேல் குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்குஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி விழுகிறது. ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் அதிகளவு தண்ணீர் விழுகிறது.
இதனால் இன்று விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் குளிக்க உல்லாசப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.












Click it and Unblock the Notifications