காயிதேமில்லத் நினைவிடத்தில் கருணாநிதி அஞ்சலி
சென்னை:
காயிதேமில்லத்தின் 110வது பிறந்த நாளையொட்டி சென்னையிலுள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதிமற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி காலை 8 மணியளவில் காயிதேமில்லத் நினைவிடத்திற்கு வந்து மலர் போர்வை போர்த்திவணங்கினார். அவருடன் ஆற்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.வி. அன்பழகன் ஆகியோர் மலர் போர்வை போர்த்தி அஞ்சலிசெலுத்தினார்கள். அவர்களுடன் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், குடிசை மாற்று வாரிய தலைவர் பாலகங்கா,லியாவுதீன் சேட், எம்எல்ஏ மற்றும் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இவர்கள் தவிர காங்கிரஸ் தலைவர் வாசன், ஆரூண், எம்.பி., மக்கள் தமிழ் தேசம் கட்சித் தலைவர் கண்ணப்பன், இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உட்பட ஏராளமானோர் காயிதேமில்லத் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலிசெலுத்தினார்கள்.