நெல்லையில் கலவரம்: துப்பாக்கி சூடு- வாலிபர் கொலை
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. கலவரக்காரர்களை கலைக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே உள்ளது கரிசூழ்ந்தமங்கலம். இப்பகுதியில் இரு பிரிவை சேர்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள்.இவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.
கணபதி பலத்த காயங்களுடன் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அறிந்ததும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆயுதப்படை போலீஸாரும்குவிக்கப்பட்டனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட கண்ணனின் ஆதரவாளர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் போதுஎதிர் தரப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. வைக்கோல் படப்புகளுக்கும் தீ வைக்கப்பட்டன.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கலைக்க முயன்றனர். ஆனால் போலீஸார் மீது கலவரக்காரர்கள் சரமாரியாக கற்களை வீசினார்கள். நிலைமை மோசமாவதைஉணர்ந்த போலீஸார் கலவரக்காரர்களை விரட்ட வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதன் பிறகே கலவரக்காரர்கள் கலைந்து சென்றனர்.
சம்பவ இடத்திற்கு தென் மண்டல ஐஜி திரிபாதி, டிஐஜி கோபாலகிருஷ்ணன், எஸ்பி ஆனந்த் குமார் சோமானி மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரணைநடத்தினர்.
கலவரம் நடந்த கரிசூழ்ந்தமங்கலம் கிராமத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.