நர்சரி பள்ளிகள்: பறக்கும் படை சோதனை நாளை தொடக்கம்
சென்னை:
அனுமதி பெறாமல் இயங்கி வரும் பள்ளிகளை கண்டுபிடிப்பதற்காக நாளை தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் ஆய்வுநடத்துகின்றனர்.
அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் நர்சரி பள்ளிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடுமுழுவதும் அனுமதி பெறாத சுமார் 2,000 நர்சரி பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பள்ளிகளில் பயின்று வந்த சுமார் 1.5 லட்சம்குழந்தைகளை அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதே போல மேலும் பல பள்ளிகள் அனுமதி பெறாமல் இயங்கி வரலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துஅவற்றை கண்டுபிடிக்க கல்வித்துறை சார்பில் மாவட்டந்தோறும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5அதிகாரிகள் இடம் பெற்றிருப்பார்கள்.
இவர்கள் பள்ளிகளுக்கு சென்று திடீர் சோதனை நடத்துவார்கள். பறக்கும் படையின் சோதனை நாளை முதல் துவங்குகிறது. இந்தசோதனையில் மேலும் பல பள்ளிகள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications