இலங்கை செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இலங்கை அதிபர் சந்திரிகாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு வருவதாக உறுதியளித்துள்ளார்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். அவர் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தலைவர்களை சந்தித்து பேசினார்.
மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கை இலங்கை வரும்படி சந்திரிகா அழைத்தார். அதை மன்மோகன் சிங் ஏற்று இலங்கை வருவதாக உறுதியளித்தார்.
இதற்கிடையே 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் சந்திரிகா நேற்று இரவு இலங்கை புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications