குடந்தை தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜயகாந்த் நிதியுதவி
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகளின் உறவினர்களுக்கு நடிகர் விஜயகாந்த் இன்று நிதியுதவிவழங்கினார்.
தஞ்சை மாவட்ட விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தகுழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் விழா மற்றும் இலவச ஆஸ்துமா சிகிச்சை முகாம் கும்பகோணத்தில்நடந்தது.
இதன் பிறகு அவர் பேசுகையில், கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் அளிப்பேன் என்றுவிபத்து நடந்த உடனேயே அறிவித்தேன். ஆனால் பல்வேறு வேலைப்பளு காரணமாக நிதியுதவி வழங்க தாமதமாகி விட்டது.
தானத்தில் சிறந்தது அன்னதானம். அதே போல சோகத்திலேயே மிகவும் மோசமானது புத்திர சோகமாகும். எனவே குடந்தைபள்ளி தீவிபத்தில் தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு யாராலும் ஆறுதல் கூற முடியாது.
மிகவும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்க்கிறோம். அவர்கள் வளர்ந்து நமக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று எதிர்பார்த்துஇருக்கும் நேரத்தில் இது போல தீ விபத்தில் குழந்தைகளை பறி கொடுப்பது மிகவும் துயரமான சம்பவமாகும்.
தமிழ்நாட்டில் தற்போது அனுமதியின்றி இயங்கும் பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இதில் எந்த தவறும் இல்லைஎன்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications