தமிழகத்தில் பிஇ, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுகள் ரத்து!
சென்னை:
தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டு முதல் (2005-2006) பிஇ, எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. பிளஸ்-2 தேர்வில் பெற்ற மார்க்குகள்அடிப்படையிலேயே தொழில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளது.
மேலும் பிளஸ் டூ இம்ப்ரூவ்மெண்ட் தேர்வும் ரத்து செய்யப்படுகிறது.
பிஇ, எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான கல்லூரிகளில் இடங்கள் குறைவாக இருந்த நேரத்தில், ஏராளமான மாணவர்கள் அதில் சேர விண்ணப்பித்ததால்கடந்த 1984ம் ஆண்டில் நுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. அதே நேரத்தில் மருத்துவம்,சட்டம் போன்ற படிப்புகளுக்கு இன்னும் கூடுதல் இடங்கள் தேவைப்படுகின்றன.
இந்த விஷயத்தில் அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இப்போதுள்ள பொது நுழைவுத் தேர்வு முறை பொற்றோருக்கும் மாணவர்களுக்கும் பெரும் மனச் சோர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த நுழைவுத் தேர்வுமுறை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளால் பாதிக்கப்பட்டு தொழில் படிப்பில் சேரும் வாய்ப்பை இழந்து வருகிறார்கள். பிளஸ் 2 படித்துமுடித்தவுடனேயே தொழில் கல்லூரி நுழைவுத் தேர்வுக்காக தங்களை மிகக் கடுமையாக தயார் படுத்த வேண்டிய சூழல் மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பெற்றோருக்கும் மன உளைச்சலைத் தருகிறது.
அனைத்து மாணவர்களின் நலன் கருதியும், குறிப்பாக கிராமப் புற மாணவர்களின் நலன் கருதி இந்த நுழைவுத் தேர்வு முறையில் உடனடியாக மாற்றம் தேவை எனஉணர்கிறேன்.
இந்தக் கல்வி ஆண்டு முதலே (2005-2006) முதலே இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. அதன்படி பிளஸ்-2 தேர்வில் பெற்ற மார்க்குகள் அடிப்படையிலேயேதொழில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கும்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் இந்த மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கப்படுவார்கள். புதிதாகவும் மாணவ, மாணவிகள் விண்ணிப்பிக்கலாம். இதற்கானகால நிர்ணயம் விரைவில் அறிவிக்கப்படும்.
பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூலை மாத தொடக்கத்தில் கவுன்சிலிங் நடக்கும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் தொழில் கல்லூரிகளில் சேரதேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த புதிய திட்டம் பிஇ, பிடெக், பி.ஆர்க் மற்றும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி.பார்ம், விவசாயம், வெட்னரி சயின்ஸ், சட்டம் ஆகிய படிப்புகளுக்கு பொருந்தும்.
வெறும் பிளஸ் டூ மார்க் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். வேறு எந்த வகையிலும் நுழைவுத் தேர்வு முறை கிடையாது. அதிக மதிப்பெண்கள் பெற்று இந்தப்படிப்புகளில் சேர தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிங்கிள் வின்டோ முறையில் கலந்தாய்வு நடத்தி படிப்பில் சேர்க்கப்படுவார்கள்.
நுழைவுத் தேர்வு ரத்தாவதால், பிளஸ் டூவில் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு ரத்தாகிறது. இந்த ஆண்டு முதல் இது அமலுக்கு வருகிறது.
இவ்வாறு ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications