புலிகள் பெட்ரோல் கடத்துவதாக அதிகாரிகள் பொய் தகவல்: வைகோ

Subscribe to Oneindia Tamil

அரியலூர்:

தமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் பெட்ரோல், டீசல் கடத்துவதாக அதிகாரிகள் தவறான தகவல் பரப்பி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட கட்சி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வைகோ அரியலூல் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் அரசு மக்களிடையே நற்பெயரை பெற்று வருகிறது. அருமையான நிர்வாகத்தையும், கட்டுக் கோப்பான ஆட்சியையும்அது கொடுத்து வருகிறது.

ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை காங்கிரஸ் அரசு நிச்சயம் பூர்த்தி செய்யும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். எந்தக் காரணம் கொண்டும் மத்தியஅமைச்சரவையில் நாங்கள் சேர மாட்டோம்.

தமிழகத்தில் புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் அதிமுகவினர் அதிகாரிகள் உதவியுடன் செய்துள்ள வரலாறு காணாத தில்லுமுல்லு மத்திய அரசு அதிகாரிகள் மூலம்வெளிப்பட்டுவிட்டது. இது போன்ற தில்லுமுல்லு மூலம் தான் இடைத் தேர்தலில் ஜெயலலிதா ஜெயித்தார்.

ஒவ்வொரு தொகுதியிலும் பல்லாயிரணக்கான போலி வாக்காளர்கள் படிவங்களை அதிகாரிகள் முன் கூட்டியே பெற்றுக் கொண்டு பின்னர் அவற்றை பட்டியலில்சேர்க்கும் ஜெயலலிதாவின் ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்துவிட்டது.

காவிரி விஷயத்தில் கர்நாடகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் தமிழகத்துக்கு நீதி மறுக்கப்படுகிறது. இதனால் முதலில் தென்னக நதிகளை இணைக்க வேண்டும். நதிகளைதேசியமயமாக்கினால் தான் பிரச்சனை தீரும்.

தமிழகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் பெட்ரோல், டீசல் கடத்துவதாக அதிகாரிகள் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டுள்ளனர் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+