வாஜ்பாயுடன் அத்வானி சந்திப்பு
டெல்லி:
தனது ராஜினாமாவை வாபஸ் பெற அத்வானி மறுத்து வருவதால், மூத்த பாஜக தலைவர்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அத்வானியை வாஜ்பாய் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு கோரினார்.
பாஜக தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை மாற்றக் கோரி மூத்த தலைவர்களான வெங்கையா நாயுடு, பிரமோத் மகாஜன், சுஷ்மா சுவராஜ், உமாபாரதி (இவர் சமீபத்தில் தான் வெளியே போய்விட்டு கட்சிக்கு வந்தார்) உள்ளிட்டோர் அத்வானியுடன் நெடு நேரம் பேச்சு நடத்தினர்.
ஆனால், ஜின்னா குறித்த தனது கருத்துக்கு எழுந்துள்ள விமர்சனங்கள் துரதிஷ்டவசமானவை என்று கூறிய அத்வானி, தனது ராஜினாமா முடிவில் மாற்றம் இல்லை எனதிட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
என்னை, காட்டிக் கொடுத்த நபர் என்று சிலர் (பிரவீண் தொகாடியா) விமர்சித்த நிலையிலும் அதை எதிர்த்து பாஜகவில் இருந்து யாருமே பேசவில்லை என்று அத்வானிவருத்தம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.
சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் அத்வானி இறங்கி வர மறுத்துவிட்டதால், சஞ்சய் ஜோஷி (ஆர்எஸ்எஸ் பிரமுகர்), சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங்,முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயில் இல்லத்தில் குவிந்தனர்.
இந்த விஷயத்தில் வாஜ்பாயை வைத்து அத்வானியை சமாதானப்படுத்த அவர்கள் முயன்று வருகின்றனர். ஜின்னா குறித்த அத்வானியின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக வாஜ்பாய் கூறியுள்ளார்.
இந் நிலையில் வாஜ்பாயை அவரது இல்லத்தில் வந்து அத்வானி சந்தித்தார். அப்போது ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு வாஜ்பாய் வலியுறுத்தினார்.
30 நிமிடம் நடந்த இச் சந்திப்புக்குப் பின் வெளியில் வந்த அத்வானி நிருபர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications