ராஜினாமா வாபஸ் இல்லை: அத்வானி உறுதி-பிரதமருடன் சந்திப்பு
டெல்லி:
பதவியை ராஜினாமா செய்ததை வாபஸ் வாங்கும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.
வாஜ்பாய் உட்பட முக்கிய பாஜக தலைவர்கள் வற்புறுத்திய போதிலும் தனது ராஜினாமாவை வாபஸ் பெற அத்வானி மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து பாஜகவுக்குபுதிய தலைவரை தேர்ந்தெடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை, அத்வானி இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது அவர், பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்தும், அதிபர் முஷாரப்,பிரதமர் ஷெளகத் அஸீஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கஸூரி மற்றும் அந்நாட்டுத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்தும்பிரதமரிடம் விளக்கினார்.
இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணம் குறித்து நான் பிரதமரிடம் பேசினேன். என்னுடைய ராஜினாமாவை வாபஸ் வாங்கும்பேச்சுக்கே இடமில்லை.
என்னுடைய ராஜினாமா முடிவை வாபஸ் வாங்க பெரும் முயற்சி எடுத்த வாஜ்பாய் மற்றும் பாஜக தலைவர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்என்றார்.












Click it and Unblock the Notifications