ஆடிட்டர்: ஜெயேந்திரர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
ஆனால், அப்போது ஜெயேந்திரருடன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நல்லுறவு நிலவியதால் எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
சங்கரராமன் கொலைக்குப் பின்னர் ஜெயேந்திரர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜெயேந்திரர், விஜயேந்திரர்,கூலிப் படைத் தலைவன் அப்பு, காண்டிராக்டர் ரவி சுப்ரமணியம், விஜயேந்திரர் தம்பி ரகு, சங்கர மட முன்னாள் மேலாளர்சுந்தரேச அய்யர்உள்ளிட்ட 12 பேர் ராதாகிருஷ்ணன் தாக்குதல் வழக்கிலும் கைது செய்யப்பட்டனர்.
சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் தனிப்படை போலீஸாரே இந்த வழக்கையும் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று ஆடிட்டர் வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நீதிபதி உமா மகேஸ்வரியிடம், அரசு வழக்கறிஞர்ஜெயரத்தினகுமார் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தார். 600 பக்கங்கள்கொண்ட இந்தக் குற்றப் பத்திரிக்கையில், 81 பேர்அரசு சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குற்றப் பத்திரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட பின்னர் நகலெடுக்கும் பணி தொடங்கும். அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்12 பேரும் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களிடம் நகல்கள் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications