ராஜினாமாவை வாபஸ் பெற்றார் அத்வானி
டெல்லி:
பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த அத்வானி, தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார். இதையடுத்து 4 நாட்கள்நடந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
தலைவர் பதவியைப் பிடிக்க அவரது பரம வைரியான முரளி மனோகர் ஜோஷி முயன்றதால், தனது ராஜினாமா முடிவை அத்வானிதிரும்பப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக தலைவர் பதவியைப் பிடிக்க கட்சிக்கும் பெரும் போட்டி உருவானது. தனது ஆதரவாளர்களான நாயுடு அல்லதுஜஸ்வந்த் சிங்கை தலைவர் பதவியில் அமர்த்த அத்வானி திட்டமிட்டார். ஆனால், சங் பரிவார் உதவியுடன் பதவியைப் பிடிக்கஜோஷி முயன்றார்.
பாஜக தலைவர் பதவியை நீண்ட காலமாகவே குறி வைத்திருக்கும் முரளி மனோகர் ஜோஷி இம் முறை அதை அடைவதில்தீவிரமாகக் களம் இறங்கினார். ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங் தள், சிவ சேனை உள்ளிட்ட சங் பரிவாரங்களுக்கு மிகவும்வேண்டியவரான ஜோஷி, அவர்களது ஆதரவைத் திரட்ட ஆரம்பித்தார்.
அதற்கு முன்னோட்டமாக, ஜின்னாவைத் தாக்கியும் அவரை அத்வானி புகழ்ந்து பேசியது தவறு என்று கருத்து தெரிவித்தார்ஜோஷி.
இந் நிலையில் 9ம் தேதி நடப்பதாக இருந்த பாஜக உயர் மட்டக் கமிட்டிக் கூட்டம், அத்வானியின் வலியுறுத்தலின்படி நேற்றைக்குதள்ளி வைக்கப்பட்டது
இதனால் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், மற்றும்முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அத்வானி தனது ராஜினாமாமுடிவை வாபஸ் பெறுவதாக கூறினார்.
இந்த தகவலை ஆட்சி மன்றக்குழு கூட்டத்திற்கு பிறகு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பிரமோத் மகாஜன்தெரிவித்தார்.
மேலும் இக் கூட்டத்தில் ஜின்னாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications