குற்றால சீசன் களை கட்டியது
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதாலும், சாரல் மழை பெய்யத் தொடங்கியிருப்பதாலும்,குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாகவே குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. அருவிகளிலும் தண்ணீர் கொட்டத்தொடங்கியுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
"குளுகுளுவென காற்றும், சாரல் மழையுமாக குற்றாலம் கிளைமேட் படு அருமையாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குவியத்தொடங்கியுள்ளனர். அருவிகளில் கூட்டம் காணப்படுகிறது. குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் சீசன் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீசன் தொடங்கியிருப்பதால் குற்றாலத்தில் உள்ள வியாபாரிகளும் சந்தோஷமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications