நுழைவுத் தேர்வு ரத்து: வெற்றிக் கூட்டம் நடத்துகிறது பாமக
செஞ்சி:
நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதைத் தொடர்ந்து,வருகிற 18ம் தேதி வெற்றிக் கூட்டம் நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.
பாமகவுக்கும், மாணவர் சமுதாயத்திற்கும், பெற்றோருக்கும், ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் கிடைத்த வெற்றி. கிராமப்புறமாணவர்கள் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களாக பல்வேறு தரப்பினரும், ராமதாஸுக்கு தொலைபேசி மூலமும், நேரிலும் பாராட்டு தெரிவித்த வண்ணம்உள்ளனர். வெளிநாடு வாழ் தமிழர்களும் ராமதாஸுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த மிகப் பெரிய வெற்றியை பாமக மாணவர் சங்கம் சார்பில் ஒரு வார காலம் வெற்றி விழாவாக கொண்டாடவுள்ளோம். வரும்13ம் தேதி நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வெற்றிக் கூட்டம் நடத்தப்படும்.
கல்வியாளர்கள், முன்னாள் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வர்.
13 லட்சம் போலி வாக்காளர்களை சேர்க்க அதிமுக சதி செய்துள்ளது. இந்த சதியை அனைத்துக் கட்சியினரும் கண்டித்துள்ளதைதேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் மணி.












Click it and Unblock the Notifications