மதுரை: கைதிகள் தாக்கி வார்டர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை மத்திய சிறையில் கைதிகள் சேர்ந்து வார்டரை சரமாரியாகத் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

மதுரை மத்திய சிறையில் வெங்கடேஷ் என்ற முஸ்தபா அடைக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர். இவருக்கு சிலர் கஞ்சா, சிகரெட் கொடுக்க முயற்சி செய்துள்ளனர். இதைவார்டர் சுப்பையா சாமி என்பவர் தடுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், சுப்பையா சாமியை ஆபாசமாக திட்டி தாக்க முயன்றார். அப்போது வேறு சில கைதிகள்வந்து இருவரையும் விலக்கி விடுவது போல நடித்து, வார்டரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

கைதிகளின் இந்த திடீர் தாக்குதலால் நிலை குலைந்த வார்டர் சுப்பையா சாமி படுகாயமடைந்தார். அவரை மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வார்டரை தாக்கிய வெங்கேடஷை தனி சிறையில் அடைக்க சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+