For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல்லடத்தில் பெண் கற்பழித்துக் கொலை: நகைகள் கொள்ளை

By Staff
Google Oneindia Tamil News

பல்லடம்:

கோவை மாவட்டம் பல்லடம் அருகே விசைத்தறி ஆலை அதிபரின் மனைவி கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது நகைகளும் கொள்ளைடிக்கப்பட்டுள்ளன.

பல்லடம் அருகே உள்ளது அம்மாபாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் விசைத்தறிஆலை நடத்தி வருகிறார்.

நேற்றிரவு பழனிச்சாமி வீட்டில் இல்லாத நிலையில், கொள்ளையர்கள் புகுந்தனர்.

வீட்டில் தனியாக இருந்த பழனிச்சாமியின் மனைவியை அங்கிருந்து தூக்கிச் சென்று அருகே உள்ள காட்டுப்பகுதியில் வைத்து கற்பழித்துள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்தநகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளைக் கும்பலைப் பிடிக்கபோலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X