தா.கி. கொலை வழக்குக்கு இடைக்காலத் தடை
மதுரை:
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கை மதுரை நீதிமன்றம் விசாரிக்க உயர்நீதிமன்றக் கிளை தடைவிதித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள மு.க.அழகிரி உள்ளிட்ட 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டுள்ளது.
அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரி, மிகுந்த செல்வாக்கு உள்ளவர். அவர் விசாரணைக்காகநீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம் மிகப் பெரிய கூட்டம் கூடவே வருகிறது. இதில் சிலர் தங்களை வக்கீல்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். கூட்டம் அதிகமாக இருப்பதால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.
அரசு வழக்கறிஞரையும் சரியாக பேச விடாமல் அவர்கள் கோஷமிடுகிறார்கள். சாட்சிகள் சிலருக்கும், தா.கிருட்டிணன் சகோதரர்ராமையாவுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளது. நீதிபதிக்கும் கூட மிரட்டல்கள் வந்துள்ளன.
வேறு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று விசாரணை நீதிபதியே கோரியுள்ளார். இதுதொடர்பாகஉயர்நீதிமன்ற பதிவாளர், மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி ஆகியோருக்கும் அவர் கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் இப்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு தானே விசாரிப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் இந்த வழக்கை வேறுநீதிமன்றத்திற்கு மாற்றுவதே நல்லது என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மாசிலாமணி, தா.கி. கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகவும், விசாரணநீதிபதி எழுதியதாக கூறப்படும் கடிதங்களை உயர்நீதிமன்றக் கிளையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், அழகிரி உள்ளிட்ட 13 பேருக்கும் வேறு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றுவது குறித்து விளக்கம் தருமாறு கூறி நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டார்.