For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் தேவருக்கு நினைவிடம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மதுரை திருநகரில் அவர் கடைசியாக வசித்த வீட்டில் நினைவிடம் அமைக்கப்படும்என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை திருநகரில் உள்ள பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் கடைசியாக வசித்த வீட்டை ரூ. 22.59 லட்சம் மதிப்பில் நினைவிடமாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் ரூ. 19.5 லட்சம் மதிப்பில் ரெட்டைமலை சீனிவாசன் மணி மண்டபம் மற்றும் முழு உருவச் சிலைஅமைக்கப்படும்.

கட்டபொம்மனின் போர்ப்படைத் தளபதியாக விளங்கிய வெள்ளையத் தேவனுக்கு திருவைகுண்டம் வட்டம், வல்லநாட்டில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும்.

வீரன் சுந்தரலிங்கத்திற்கு பாஞ்சாலங்குறிச்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும்.

மொழி ஞாயிறு என அழைக்கப்படும் தேவநேயப் பாவாணருக்கு மதுரை நகரில் ரூ. 33 லட்சத்தில் மணி மண்டபம்அமைக்கப்படும்.

இந்தப் பணிகள் அனைத்தும் விரைவிலேயே தொடங்கவும் ஆணையிட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X