For Daily Alerts
Just In
மதுரையில் தேவருக்கு நினைவிடம்
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மதுரை திருநகரில் அவர் கடைசியாக வசித்த வீட்டில் நினைவிடம் அமைக்கப்படும்என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் ரூ. 19.5 லட்சம் மதிப்பில் ரெட்டைமலை சீனிவாசன் மணி மண்டபம் மற்றும் முழு உருவச் சிலைஅமைக்கப்படும்.
கட்டபொம்மனின் போர்ப்படைத் தளபதியாக விளங்கிய வெள்ளையத் தேவனுக்கு திருவைகுண்டம் வட்டம், வல்லநாட்டில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும்.
வீரன் சுந்தரலிங்கத்திற்கு பாஞ்சாலங்குறிச்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும்.
மொழி ஞாயிறு என அழைக்கப்படும் தேவநேயப் பாவாணருக்கு மதுரை நகரில் ரூ. 33 லட்சத்தில் மணி மண்டபம்அமைக்கப்படும்.
இந்தப் பணிகள் அனைத்தும் விரைவிலேயே தொடங்கவும் ஆணையிட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Story first published: Friday, June 10, 2005, 5:30 [IST]