அரசு மருத்துவமனை அவலம்: மனைவிக்கு கணவரே பிரசவம் பார்த்தார்!!!
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு அவரது கணவரே பிரவசம்பார்த்தார். அதில் குழந்தை இறந்ததால், அவர்களது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இந் நிலையில் வசந்தாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, அவரது கணவரே பிரசவத்தை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதில் குழந்தை பிறந்ததும் இறந்தது.
இதையடுத்து வசந்தாவின் உறவினர்கள் குழந்தையின் பிணத்தை எடுத்துச் செல்ல மறுத்து போராட்டத்தில் குதித்தனர்.
பிரசவத்திற்கு வந்தவர்களே பிரசவம் பார்த்துக் கொள்ளும் அவல நிலையில் அரசு மருத்துவமனை இருப்பதைக் கண்டித்தும்,வசந்தாவின் குழந்தை இறப்பதற்குக் காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்கள் கோஷமிட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications