கழிவறையைக் கழுவிய மாணவர்கள்: தலைமையாசிரியை சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பஞ்சாயத்துத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் கழிவறையை துப்புறவு செய்த விவகாரத்தில்மாவட்ட ஆட்சித் தலைவர், பள்ளி தலைமை ஆசிரியையை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.

கணபதி பாளையத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், அங்குள்ள பஞ்சாயத்துத்தொடக்கப் பள்ளிக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறையை இரண்டு மாணவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்த அவர், யார் உங்களை இந்த வேலை செய்யச் சொன்னது என்று அவர்களிடம் கேட்டார்.

அதற்கு அந்த மாணவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியர் தான் இவ்வாறு செய்யக் கூறியதாக கூறினர். இருவரும் முறையே 3வதுமற்றும் 4வது வகுப்பு படிக்கும் மாணவர்கள்.

மாணவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ந்த ஆட்சித் தலைவர், தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியர்களைக் அழைத்து,குழந்தைத் தொழிலாளர் முறையை நீக்க அரசு பாடுபட்டு வருகிறது. ஆனால் அரசு நடத்தும் பள்ளியிலேயே இதுபோல படிக்கவரும் குழந்தைகளை துப்புறவுத் தொழிலாளி போல வேலையில் ஈடுபடுத்தியது கடும் கண்டனத்துக்குரியது, மன்னிக்கமுடியாதது என்று ஆவேசமாக கூறினார்.

பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அவர் உடனடியாக பள்ளிக்கு வந்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி ஆட்சித் தலைவருக்கு அறிக்கைஅனுப்பினார்.

இதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை சந்திராவை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன்உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+