இடம் தர மறுக்கும் பள்ளிகள்: அவதிப்படும் வீரப்பனின் மகள்கள்
சென்னை:
வீரப்பனின் 2 மகள்களுக்கும் பள்ளியில் படிக்க அனுமதி மறுக்கப்படுவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி கூறுகிறார்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து இவர்கள் இருவரும் தங்களது பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாமல்வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த ஆண்டு இறுதித் தேர்வில் வித்யா ராணி, பிரபா ஆகிய இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தவருடம் இவர்கள் இருவரும் 9 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்.
ஆனால் எந்தப் பள்ளியிலும் இவர்களை சேர்க்க மறுக்கிறார்களாம். வீரப்பனின் மகள்கள் என்று தெரிந்ததும் பயந்து போய்அப்படியே பொட்டியைக் கட்டச் சொல்லிவிடுகிறார்கள்.
இது குறித்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறுகையில், என்னுடைய 2 மகள்களையும் படிக்க வைக்க நான் போராடிக்கொண்டிருக்கிறேன். திருச்சி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பல பள்ளிகளுக்கு சென்று நான் எனது மகள்களைசேர்த்துக் கொள்ளுமாறு கூறினேன்.
ஆனால் வீரப்பனின் மகள்கள் என்று தெரிந்த உடன் பள்ளிகளில் சேர்க்க பயப்படுகிறார்கள். என்னுடைய மகள்களை சேர்த்தால்போலீஸார் தொந்தரவு செய்வார்கள் என்று நினைத்து தயவு செய்து இந்த இடத்தை விட்டு போய் விடுங்கள் என்று கூறுகின்றனர்.யாருக்குமே மனிதாபிமானம் இல்லை.
என்னுடைய மகள்களை பள்ளியில் சேர்க்க உதவுமாறு பல அரசியல்வாதிகளிடமும் நான் உதவி கேட்டேன். ஆனால் முதலில்உதவுவதாக கூறிவிட்டு பிறகு வழக்கம் போல நழுவி விட்டார்கள்.
என் கணவர் செய்த பாவத்துக்காக இந்த அப்பாவி குழந்தைகள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும். எல்லோரும் எங்களைவெறுத்து ஒதுக்குகிறார்கள்.
என்னுடைய கணவர் உயிருடன் இருந்த போது போலீஸார் கொடுத்த தொந்தரவுக்கு பயந்து நான் எனது மகள்களைபிரிந்திருந்தேன். இப்போது தான் நான் எனது மகள்களுடன் சேர்ந்திருக்கிறேன். இனியாவது எங்களை இந்த உலகம் நிம்மதியாகவாழ விடக்கூடாதா?
இருவரும் கான்வென்டில் ஹிந்தியை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்ததால் தமிழில் எழுதவோ, படிக்கவோ தெரியாது. இதுதான் இப்போது பிரச்சினையாக இருக்கிறது. என்னுடைய மகள்களின் எதிர்காலத்திற்கு நல்ல மனது படைத்தவர்கள் உதவவேண்டும் என்றார்.
வீரப்பன் தன்னுடைய மூத்த மகள் வித்யா ராணியை ஐஏஎஸ் படிக்க வைக்கவும், 2வது மகள் பிரபாவை கம்ப்யூட்டர்என்ஜினியராக்கவும் ஆசைப்பட்டானாம்.












Click it and Unblock the Notifications